திருமழபாடி (Thirumazhabaadi)
திருமழபாடி இந்த திருத்தலம் திருவையாற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் வடமேற்கில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம், திருச்சியிலிருந்தும் புள்ளம்பாடி வழியாகவும் செல்லலாம்.
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வைத்தியநாத சுவாமி, அம்மனின் பெயர் சுந்தராம்பிகை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருடா என்னும் மிருகம் பிரம்ம உலகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பூசித்துகொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்து செல்லவந்த பிரம்மாவால் முயன்று அவரால் முடியாமல் இது என்ன வயிரதூணோ என்று கூறியதால் இறைவன் வயிரதூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார்.
திருஞானசம்பந்தரோ
வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே
என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று பாடி அருள் செய்திருக்கின்றார்.
இந்த இறைவனை மூவரில் இருவர் தேடி வந்து பாடினார்கள் ஆனால் இறைவனோ ஒருமுறை சுந்தரர் மற்ற அருகில் உள்ள தளங்களை தரிசித்துவிட்டு திருவாலம்பொழிலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் கனவில் தோன்றி "மழபாடி வர மறந்தனையோ? என்று வினவினார்" இதனை கேட்டு விழித்த சுந்தரர்
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும் மேலும் ஒரு சிலர் இங்குள்ள சிவா பெருமானின் மழு நர்த்தனம் செய்ததால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குலத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே மேலும் மேலும் மேலும் சில இருக்கிறது.
இந்த கோவிலின் விமானம் முதலாம் ராச ராச சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள சிறப்பு விசேஷம் என்னவெனில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு திருமணம் வெகு விமரிசையாக நடக்கும், இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இத்தனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
இந்த இறைவனை மூவரில் இருவர் தேடி வந்து பாடினார்கள் ஆனால் இறைவனோ ஒருமுறை சுந்தரர் மற்ற அருகில் உள்ள தளங்களை தரிசித்துவிட்டு திருவாலம்பொழிலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் கனவில் தோன்றி "மழபாடி வர மறந்தனையோ? என்று வினவினார்" இதனை கேட்டு விழித்த சுந்தரர்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அண்ணே உனையல்லால் இனியாரை நினைக்கேனே
என்று பாடி பின்னர் மழபாடி சென்று தரிசனம் செய்தார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அண்ணே உனையல்லால் இனியாரை நினைக்கேனே
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும் மேலும் ஒரு சிலர் இங்குள்ள சிவா பெருமானின் மழு நர்த்தனம் செய்ததால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குலத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே மேலும் மேலும் மேலும் சில இருக்கிறது.
இந்த கோவிலின் விமானம் முதலாம் ராச ராச சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இங்குள்ள சிறப்பு விசேஷம் என்னவெனில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு திருமணம் வெகு விமரிசையாக நடக்கும், இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இத்தனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
ஆலய தீர்த்தம்
இந்த குளத்தில்தான் மருத்துவ குணம் உள்ளதாக நம்பிக்கை
இந்த குளத்தில்தான் மருத்துவ குணம் உள்ளதாக நம்பிக்கை
லேபிள்கள்: appar, cholan, kollidam, Nandheeswar, Nandhi, raja raja chozhan, sambanthar, sundarar, sundharambigai, thirumazhabaadi, thirumazhabadi, Vaitheeswarar, Vaithiyanaatha swamy, Vaithiyanatha swamy
3 கருத்துகள்:
வணக்கம்,
தமிழ் நாட்டு ஆலயங்களின் பெருமைகளையும், தமிழர்களின் மகோன்னதமான நாகரீகத்தை அறிந்துக் கொள்வதிலும் மிகவும் பெருமையாக உள்ளது. அருமையான பதிவு, மேலும் தமிழ் நாட்டு ஆலயங்கள் தொடர்பான பதிவுகளை இடுங்கள், நன்றி.
Hi
the photo of the kollidam river from mazhapaadi side with the customary banyan tree.
a scene actually the climax of KAVIRI MAINTHAN occurs in the vicinity and the banyan tree plays a great role there too.
regards
venketesh
proudly
say my native திருமழபாடி
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு