தீபாவளி

அதிகாலை விழித்தெழுந்து
எண்ணெய் நன்றாய் தேய்த்துக்கொண்டு
கங்கை நீரால் குளித்துவிட்டு
கடவுளரை மனதில் நினைத்து
தீபங்கள் ஒளிரச் செய்வோம்
வெடிகள் வெடித்து மகிழ்ந்திடுவோம்
உற்றார் உறவினர் ஒன்று கூட
அண்டை அயலார் மனம் நெகிழ
இனிப்புகள் பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்
இனிய தமிழால் வாழ்த்திடுவோம்
ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட
நல்லெண்ணங்கள் நாளும் வளர்ந்திட
உள்ளிருள் மறைந்து ஒளி பெற்றிட
அண்டமெங்கும் அன்பு மலர
உயிர்களெல்லாம் இன்புற்றிருக்க
உலகாளும் இறைவனை வேண்டி
தினம் ஒரு தீபாவளி பெற்றிடுவோம்
தீபங்கள் ஒளிரட்டும்
தீய எண்ணங்கள் அழியட்டும்
நன்மை நாளும் பெருகட்டும்
நாடும் வீடும் செழிக்கட்டும்
என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு