வியாழன், 23 அக்டோபர், 2008

தீபாவளி


அதிகாலை விழித்தெழுந்து

எண்ணெய் நன்றாய் தேய்த்துக்கொண்டு

கங்கை நீரால் குளித்துவிட்டு

கடவுளரை மனதில் நினைத்து

தீபங்கள் ஒளிரச் செய்வோம்

வெடிகள் வெடித்து மகிழ்ந்திடுவோம்

உற்றார் உறவினர் ஒன்று கூட

அண்டை அயலார் மனம் நெகிழ

இனிப்புகள் பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்

இனிய தமிழால் வாழ்த்திடுவோம்

ஒற்றுமை உணர்வுகள் ஓங்கிட

நல்லெண்ணங்கள் நாளும் வளர்ந்திட

உள்ளிருள் மறைந்து ஒளி பெற்றிட

அண்டமெங்கும் அன்பு மலர

உயிர்களெல்லாம் இன்புற்றிருக்க

உலகாளும் இறைவனை வேண்டி

தினம் ஒரு தீபாவளி பெற்றிடுவோம்

தீபங்கள் ஒளிரட்டும்

தீய எண்ணங்கள் அழியட்டும்

நன்மை நாளும் பெருகட்டும்

நாடும் வீடும் செழிக்கட்டும்

என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு