பாலை தந்த இன்பம்
ஆதியந்தமில்லாத கருநீல ஆகாயக் குடையின் கீழே பொன் துகள்களாலான கடலின் நடுவிலோர் அலைக்குன்றின் உச்சியிலமர்ந்து பாலொளி பொழியும் நிலவோடு உரையாடிக் கொண்டிருக்கையில் சில்லென்று தென்றல் வந்தென் தேகமெங்கும் பரவியானந்த குளிராட்டிய பரவசத்தில் விழிவிரிய சட்டென்று எட்டிப் பார்த்த விண்மீனொன்றின் திகைப்பால் ஒளிவிழிமீன்கள் வானெங்கும் முளைக்க கண்டெனுள்ளத்திலானந்த வெள்ளம் பெருக்கெடுத்தோடி புலங்காகிதமடைந்து அமைதிபெற்ற வேளையில் சித்தத்திலோருதயம் சொன்னது காலத்தின் கட்டற்ற மாற்றத்திலும் மாறவில்லை இயற்கையோடுறவாடும் இன்பமின்றுமென்று...
#desertlife
லேபிள்கள்: இன்பம், பாலைவனம், desert life, happiness
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு