சுவேகா...
அப்போ எனக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும், ஒருநாள் சாயங்காலம் தூரத்துல இருந்து கேட்ட மோட்டார் சத்தம் வீட்டுக்கு வெளியில வந்து ஆஃப் ஆச்சு. நானும், அக்காவும் என்னன்னு வெளியில வந்து பார்த்தா, ப்ளூ கலர்ல இருந்த வண்டியில எங்கப்பா!
அந்த காலத்துல மோட்டார் வண்டி வச்சிருந்தவங்களே ரொம்ப கம்மி தான், அதுவும் எங்க தெருவுல நெறையா வீட்டுல சைக்கிள் கூட இருக்காது. அந்த மாதிரி சமயத்துல எங்கப்பா வண்டியில வந்ததுல எனக்குள்ள அவ்ளோ பெருமை. யாரோ வந்து 'என்ன வண்டி இது? வாங்கி இருக்கீங்களா?'ன்னு கேட்க, 'ஆமா இன்னிக்குதான் வாங்கினேன், இது சுவேகா'ன்னு எங்கப்பா சொன்னதும் மனசுக்குள்ள சுவேகா, சுவேகா ன்னு சொல்லி பழகிக்கிட்டேன்.
உடனே வண்டியில ஏறி ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை, ஆனா கேட்க பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு எங்கப்பா, ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்டு அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு. நான் பார்த்துக்கிட்டே நின்ன நேரம், வீட்டுக்கு வெளியில வண்டிய நிறுத்திட்டு உள்ள போயிட்டார் அப்பா. வண்டியில ஏறி போக முடியலையேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் வண்டிய சுத்திப் பார்க்க சுதந்திரம் கிடைச்சுதேன்னு குஷியாகி சுத்தி சுத்தி வந்தேன், எவர் சில்வர் டிபன் பாக்ஸ் மாதிரி ஏதோ இருக்க அதையத் தொட்டு கைய வேற லைட்டா சுட்டுக் கிட்டேன். தெருவுல இருந்த பசங்க கிட்டயெல்லாம் எங்கப்பா புது வண்டி வாங்கிருக்கார்ன்னு சொல்லி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு பெரிய பலகையை எடுத்துட்டு வந்து படிக்கட்டு மேல வெச்சு, வண்டிய மேல ஏத்தி வீட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு எல்லாரும் தூங்கப் போயாச்சு. மனசுக்குள்ள நான் மட்டும் வண்டிய சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன்.
இப்படியே சில நாள் ஓட, ஒருநாள் சாயங்காலம் வீட்டுக்கு வெளியில விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு எங்கப்பா கூப்பிட்டு 'வா, வண்டியில ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்'னாரு. இதற்குத் தானே இத்தனை நாள் காத்துக் கிடந்தேன்னு ஓடிப் போய் நின்னேன். வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு, என்னைய வண்டியில ஏத்தி உட்கார வெச்சி, அவரும் உட்கார்ந்து, அவரோட இடுப்பை சுத்தி டைட்டா புடிச்சிக்க சொல்லிட்டு என் கையப் புடிச்சி சொல்லிக் குடுத்துட்டு கிளப்பினார் வண்டிய. (இதையே இப்போ என் அஞ்சு வயசு பையன்கிட்ட சொன்னா, எல்லாம் எனக்கு தெரியும் நீ வண்டிய ஓட்டுப்பான்னு சொல்றான்.)
என்னோட முதல் முறை மோட்டார் சைக்கிள் பயணம், மூணு இல்ல நாலு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம், அதுவே ஒரு பெரிய லாங் ட்ரிப் போன பீலிங்ஸ். அரை கிலோமீட்டர் போனாவே ஊர தாண்டிருவோம், அதுக்கப்புறம் எல்லாம் வயல் வெளிதான். வேகமா காத்து காத உரசிக்கிட்டு போக, கண்ணைத் திறந்து, மூடி, எங்கப்பாவை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு என்னவோ பறந்து போறாப்பல ஒரு நினைப்பு. அந்த வண்டி அன்னிக்கு அதிகபட்சம் 40கி.மீ. வேகத்துல போயிருக்கும். இன்னிக்கு என் வண்டியில 120 கி.மீ வரைக்கும் போயிருக்கேன், அதுவும் சுகம்தான் ஆனாலும் அன்னிக்கு எங்கப்பா பின்னால உட்கார்ந்து போன சுகத்துக்கு இன்னிக்கு கிடைக்கற எதுவும் ஈடு இணையில்லை!
எதேச்சையா கூகுள்ல இந்த போட்டோவ பார்த்ததும் மண்டைக்குள்ள இருந்து புதையல் எடுக்க வேண்டியதாயிடுச்சி. பின்னால குஷன் சீட் மட்டும் மிஸ்ஸிங் இந்த போட்டோல இருக்கற வண்டியில.
PC:https://www.bikes4sale.in/

அந்த காலத்துல மோட்டார் வண்டி வச்சிருந்தவங்களே ரொம்ப கம்மி தான், அதுவும் எங்க தெருவுல நெறையா வீட்டுல சைக்கிள் கூட இருக்காது. அந்த மாதிரி சமயத்துல எங்கப்பா வண்டியில வந்ததுல எனக்குள்ள அவ்ளோ பெருமை. யாரோ வந்து 'என்ன வண்டி இது? வாங்கி இருக்கீங்களா?'ன்னு கேட்க, 'ஆமா இன்னிக்குதான் வாங்கினேன், இது சுவேகா'ன்னு எங்கப்பா சொன்னதும் மனசுக்குள்ள சுவேகா, சுவேகா ன்னு சொல்லி பழகிக்கிட்டேன்.
உடனே வண்டியில ஏறி ஒரு ரவுண்டு போகணும்னு ஆசை, ஆனா கேட்க பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு எங்கப்பா, ஸ்ட்ரிக்ட்னா ஸ்ட்ரிக்டு அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு. நான் பார்த்துக்கிட்டே நின்ன நேரம், வீட்டுக்கு வெளியில வண்டிய நிறுத்திட்டு உள்ள போயிட்டார் அப்பா. வண்டியில ஏறி போக முடியலையேன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும் வண்டிய சுத்திப் பார்க்க சுதந்திரம் கிடைச்சுதேன்னு குஷியாகி சுத்தி சுத்தி வந்தேன், எவர் சில்வர் டிபன் பாக்ஸ் மாதிரி ஏதோ இருக்க அதையத் தொட்டு கைய வேற லைட்டா சுட்டுக் கிட்டேன். தெருவுல இருந்த பசங்க கிட்டயெல்லாம் எங்கப்பா புது வண்டி வாங்கிருக்கார்ன்னு சொல்லி பெருமையா தம்பட்டம் அடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு பெரிய பலகையை எடுத்துட்டு வந்து படிக்கட்டு மேல வெச்சு, வண்டிய மேல ஏத்தி வீட்டுக்குள்ள பார்க் பண்ணிட்டு எல்லாரும் தூங்கப் போயாச்சு. மனசுக்குள்ள நான் மட்டும் வண்டிய சுத்தி சுத்தி வந்துகிட்டு இருந்தேன்.
இப்படியே சில நாள் ஓட, ஒருநாள் சாயங்காலம் வீட்டுக்கு வெளியில விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு எங்கப்பா கூப்பிட்டு 'வா, வண்டியில ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்'னாரு. இதற்குத் தானே இத்தனை நாள் காத்துக் கிடந்தேன்னு ஓடிப் போய் நின்னேன். வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு, என்னைய வண்டியில ஏத்தி உட்கார வெச்சி, அவரும் உட்கார்ந்து, அவரோட இடுப்பை சுத்தி டைட்டா புடிச்சிக்க சொல்லிட்டு என் கையப் புடிச்சி சொல்லிக் குடுத்துட்டு கிளப்பினார் வண்டிய. (இதையே இப்போ என் அஞ்சு வயசு பையன்கிட்ட சொன்னா, எல்லாம் எனக்கு தெரியும் நீ வண்டிய ஓட்டுப்பான்னு சொல்றான்.)
என்னோட முதல் முறை மோட்டார் சைக்கிள் பயணம், மூணு இல்ல நாலு கிலோமீட்டர் தூரம் போயிருப்போம், அதுவே ஒரு பெரிய லாங் ட்ரிப் போன பீலிங்ஸ். அரை கிலோமீட்டர் போனாவே ஊர தாண்டிருவோம், அதுக்கப்புறம் எல்லாம் வயல் வெளிதான். வேகமா காத்து காத உரசிக்கிட்டு போக, கண்ணைத் திறந்து, மூடி, எங்கப்பாவை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு என்னவோ பறந்து போறாப்பல ஒரு நினைப்பு. அந்த வண்டி அன்னிக்கு அதிகபட்சம் 40கி.மீ. வேகத்துல போயிருக்கும். இன்னிக்கு என் வண்டியில 120 கி.மீ வரைக்கும் போயிருக்கேன், அதுவும் சுகம்தான் ஆனாலும் அன்னிக்கு எங்கப்பா பின்னால உட்கார்ந்து போன சுகத்துக்கு இன்னிக்கு கிடைக்கற எதுவும் ஈடு இணையில்லை!
எதேச்சையா கூகுள்ல இந்த போட்டோவ பார்த்ததும் மண்டைக்குள்ள இருந்து புதையல் எடுக்க வேண்டியதாயிடுச்சி. பின்னால குஷன் சீட் மட்டும் மிஸ்ஸிங் இந்த போட்டோல இருக்கற வண்டியில.
PC:https://www.bikes4sale.in/

லேபிள்கள்: குழந்தைப் பருவம், சுவேகா, childhood joy, suvega