திருமழபாடி நிழல் படங்கள் (Thirumazhapadi Photos)
திருமழபாடியின் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள்
வலதுபுறத்தில் கன்னத்தில் கைவைத்து வியந்துகொண்டிருக்கும் அம்மையார்...
இங்கே காலை உயர்த்தி ஆடுவது யார் பார்வதி தேவியா...
நடனமாடும் காளி, கீழே விழுந்த காதணியை காலால் நடனம் ஆடிக்கொண்டே காலால் எடுத்து அணியும் பரமன், பிரம்மா, விஷ்ணு, நந்தி தேவர், அட நடுவே இருக்கும் சிறுவன் யார்...
வாசுகியை கொண்டு பாற்கடலை கடையும் தேவர்கள், அசுரர்கள், வீணை மீட்டும் இராவணன், மேலே ஆதிசேஷனில் அழகாய் சயநித்துஇருக்கும் விஷ்ணு....
சிவ பார்வதி திருமணம், அதுஎன்ன சரபேஸ்வரரா பத்து கைகள் உள்ளதே! மேலே மகுடி ஊதும் பாம்பாட்டியா..
ஏதோ யுத்தம் போலிருக்கிறது திரிபுர சம்ஹாரமா....
தேரினில் போரிடுவது யார் ஆறுமுகனா ஆனால் கையில் வில் ஏன்...
புலியை அணைத்து கொண்டிருக்கும் அந்தணர் யாரோ ஆருகில் இருக்கும் பறவை இனங்களும் யாதோ ...
யார் இது விநாயகரின் மடிமேல், இவர் பிரம்மச்சாரி இல்லையா, வடநாட்டில் உள்ளது போல் மணமானவரா அவ்வாறெனில் அது யார் சித்தியா அல்லது புத்தியா...
இது யார் பிரம்மனா ஐந்து தலை உள்ளதே சிவன் கைவைப்பதற்கு முன் உள்ளதோ...
சந்தேகமில்லாமல் சிவ பார்வதி...
இருவகையான நந்திகள் முடிந்தால் ஆறுவித்தியாசம் கண்டுபிடியுங்கள்,கோவிலை ராஜ ராஜன் காலத்தில் சீரமைக்கும்போது உருவாக்கப்பட்டதோ...
உள் கோபுரம்
முதன்மை கோபுரத்தின் உள் தோற்றம்
பனை மரம் - தல விருட்சம்
மூலவர் சன்னதி பின்புற தோற்றம்
அண்ணாமலையார்
துர்கா தேவி
ஆஹா என்ன அழகான யானைகள்
தேவாரம் ஓதுவார்கள்
லேபிள்கள்: gopuram, paarkkadal, shiva kali dance, thirumalapadi, thirumazhapadi, vimanam, vinayagar, vishnu